ABOUT BANK EXAMS

DONT TOUCH PEN, ONLY MIND CALCULTIONS WITHIN 40 SECS.

SHANMUGAM IAS ACADEMY

SHANMUGAM IAS ACADEMY
REGULAR TEST GOOD RESULT

Sunday, January 12, 2014

தவறாமல் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை



பெங்களூர், ஜன.12 - தவறாமல் பள்ளிக்கு வரும் 1_ம் வகுப்பு மாணவிகளுக்கு தினமும் ரூ.2 ஊக்கத் தொகை வழங்கும் புதிய திட்டம் கர்நாடகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெண் குழந்தைகள் கல்வி பயில்வது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. பலர் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். எனவே பெண்கள் கல்வி கற்பதை ஊக்கப்படுத்தவும், தவறாமல் பள்ளிக்கு வருவதை ஊக்கப் படுத்தவும் கர்நாடக அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி  தவறாமல் பள்ளிக்கு வரும் 1_ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.2 ஊக்கத் தொகை வ ழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இத்திட்டம் கடந்த 1_ம் தேதி முதல் அமலு க்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கர்நாடக மந்திரி சபை கூட்டம் முத ல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. அப்போது இந்த திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்த திட்டம் மூலம் பெண்எ குழந்தைகள் பள்ளிக்கு வருவது அதிகரி க்கும். ஊக்கத்தொகை அளிப்பதால் குடி சைப்பகுதி மற்றும் கிராமப் பகுதி மக்களுக்கு தங்களது பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஆர்வம் ஏற்படும் என்று மந்திரி ஜெயசந்திரா கூறினார்.
1_ம் வகுப்பில் சேரும் பெண் குழந்தைக ளுக்கு மட்டுமே இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இதற்காக ரூ.4.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  

No comments: